Friday, September 25, 2015

asteroid-will-zoom-past-earth-tomorrow-nasa-reveals-in-threat-alert

வாஷிங்டன்: ராட்சத விண்கல் ஒன்று நாளை பூமியைக் கடக்க இருப்பதை நாசா உறுதி செய்துள்ளது. ஆனால், இந்த விண்கல்லால் பூமிக்கு ஏதும் ஆபத்தில்லை என அது விளக்கமளித்துள்ளது. சுமார் 270 மீ சுற்றளவுடைய 2012 டிடி5 என்ற ராட்சத விண்கல்லானது நாளை பூமியிலிருந்து 50 லட்சம் மைல் தொலைவில் கடக்க இருக்கிறது. இதனால் உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த விண்கல் குறித்து ஏற்கனவே பல்வேறு பீதிகள் கிளப்பப்பட்டு வருகின்றன.
 
மோதினால் பூமி அழியும் இந்த விண்கல் பூமி மீது மோதப் போகிறது. அப்படி மோதினால், பூமியே அழிந்து விடும். மனித குலமே மண்ணாகப் போகிறது என்று தகவல் பரவி உள்ளது. இதனால், சில நாடுகளில் மக்கள் அழிவிற்கு ஆயத்தமாகத் தொடங்கி விட்டனர்.
Read more at: http://tamil.oneindia.com/news/international/doomsday-asteroid-will-zoom-past-earth-tomorrow-nasa-reveals-in-threat-alert-236371.html

Read more at: http://tamil.oneindia.com/news/international/doomsday-asteroid-will-zoom-past-earth-tomorrow-nasa-reveals-in-threat-alert-236371.html

No comments:

Post a Comment